செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-10-10 10:18 GMT   |   Update On 2020-10-10 10:18 GMT
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யும்.

சென்னையில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக கடலூர் வேப்பூரில் 13, ஒகேனக்கல், மதுரையில் தலா 8 செ.மீ. மழை பதிவானது.

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும், அந்தமான் கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது.

பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News