செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ மகளை கடத்தி சென்று விட்டார்- ஐகோர்ட்டில் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல்

Published On 2020-10-06 03:35 GMT   |   Update On 2020-10-06 03:35 GMT
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாகவும் அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை:

கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அ.தி.மு.க.வை சேர்ந்த பிரபு. இவர் சவுந்தர்யா என்ற கல்லூரி மாணவியை நேற்று திடீரென திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் இவருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தியாகதுருகத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் தந்தை சாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், தன்னுடைய மகளை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆசைவார்த்தை கூறி கடத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தன்னை சிலர் மிரட்டுகிறார்கள். எனவே தனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Tags:    

Similar News