செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறது திமுக - அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2020-10-04 09:35 GMT   |   Update On 2020-10-04 09:35 GMT
அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. பார்க்கிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை:

மதுரையில் அதிமுக அம்மா பேரவையின் சார்பில் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. பார்க்கிறது. ஜனநாயக இயக்கம் என்றால் கோஷ்டி பூசல் வரத்தான் செய்யும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் துரோகம் இருந்தது. பல துரோகிகளை அதிமுக சந்தித்துள்ளது.

பதவி வாங்கி உயர்ந்தவர்கள் துரோகம் செய்து விட்டு ஓடியபோதும் கட்சியை தொண்டர்கள் தான் காத்தனர் என்றார்.
Tags:    

Similar News