செய்திகள்
கோவில் உண்டியல் கொள்ளை

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Published On 2020-10-03 14:25 GMT   |   Update On 2020-10-03 14:25 GMT
தரகம்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரகம்பட்டி:

தரகம்பட்டி அருகே உள்ள சரக்கம்பட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே ஊரைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டிச் சென்றுள்ளார். நேற்று காலை கோவிலை திறந்து பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. எவ்வளவு பணம் திருட்டு போனது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து பூசாரி காளியப்பன், சிந்தாமணிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News