செய்திகள்
மெட்ரோ ரெயில்

சென்னையில் நாளை காலை 7 மணிக்கு பதிலாக காலை 6 மணிக்கு மெட்ரோ ரெயில் சேவை

Published On 2020-10-03 09:23 GMT   |   Update On 2020-10-03 09:23 GMT
சென்னையில் நாளை காலை 7 மணிக்கு பதிலாக காலை 6 மணிக்கு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படுகிறது.
சென்னை:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரெயில் சேவை நாளை காலை 6 மணி முதல் இயக்கப்படுகிறது.

இது குறித்து மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாளை மட்டும் மெட்ரோ ரெயில் சேவை காலை 6 மணி முதல் இயக்கப்படுகிறது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி தேர்வு) நடத்தும் தேர்வை எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது மெட்ரோ ரெயில் சேவைகளை நாளை (அக்டோபர் 4ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பதிலாக காலை 6 மணி முதல் தொடங்க உள்ளது. மெட்ரோ ரெயில் சேவைகள் நாளை முழுவதும் உச்ச நேரம் (பீக் ஹவர்ஸ்) இல்லாமல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News