செய்திகள்
கைது

திருமங்கலம் அருகே விபசாரம்- பெண்கள் உள்பட 3 பேர் கைது

Published On 2020-10-01 11:38 GMT   |   Update On 2020-10-01 11:38 GMT
திருமங்கலம் அருகே வீடு வாடகைக்கு பிடித்து விபசார தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்:

திருமங்கலம் சோழவந்தான் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 34). இவர் மறவன்குளம் அருகே வீடு வாடகைக்கு பிடித்து பெண்களை வைத்து விபசார தொழிலில் ஈடுபட்டார். 

இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டு சிவராமனையும், அவருடன் இருந்த 2 பெண்களையும் கைது செய்தனர். 

விபசாரத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களையும் சிவராமன் சப்ளை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News