செய்திகள்
பொன்னேரி அருகே லாரி மோதி தொழிலாளி பலி
பொன்னேரி அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருந்ததி காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் பொன்னேரி- பஞ்செட்டி நெடுஞ்சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.