செய்திகள்
சிறப்பு ரெயில்

திருநெல்வேலி, செங்கோட்டை, ராமேஸ்வரம், மதுரைக்கு சிறப்பு ரெயில்

Published On 2020-09-30 12:06 GMT   |   Update On 2020-09-30 12:06 GMT
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, ராமேஸ்வரம், மதுரைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2-ம்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 2-ந்தேதி நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 6.45 மணிக்கு நெல்லை சென்றடையும். நெல்லையில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் காலை 6.35 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அக்டோபர் 2-ந்தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 5.45 மணிக்கு புறப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு 5-ந்தேதி இயக்கப்படும் ரெயில், இரவு 8.25 மணிக்கு புறப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை 3-ந்தேதியும், செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 4-ந்தேதியும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து இரவு 8.40 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து 6.10-க்கும் புறப்படுகிறது.

சென்னை - மதுரை, மதுரை - சென்னை இடையே அக்டோபர் 2-ந்தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ரெயில் மதியம் 3.15 மணிக்கு புறப்படும்.
Tags:    

Similar News