செய்திகள்
கைது

குளித்தலை அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

Published On 2020-09-30 11:01 GMT   |   Update On 2020-09-30 11:01 GMT
குளித்தலை அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:

குளித்தலை அருகேயுள்ள குமாரமங்கலம் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் 3 பேர் தப்பி ஓடி விட்டனர். 2 பேர், போலீசார் பிடியில் சிக்கினர். பின்னர், பணம் வைத்து சூதாடியதாக மேட்டுமருதூரை சேர்ந்த மோகன்(வயது 34), குமாரமங்கலத்தை சேர்ந்த ராஜலிங்கம் (27) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News