செய்திகள்
அமைச்சர் காமராஜ்

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்- அமைச்சர் காமராஜ்

Published On 2020-09-30 09:48 GMT   |   Update On 2020-09-30 09:48 GMT
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
சென்னை:

சென்னையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது:

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்.  ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு கூடுதல் விதிகளுடன் 5% பொருட்களை கூடுதலாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எங்கு வசித்தாலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News