செய்திகள்
புதிய அங்கன்வாடி கட்டிடத்தை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் திறந்து வைத்த காட்சி.

தென்காசி அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம்- கலெக்டர் திறந்து வைத்தார்

Published On 2020-09-30 08:03 GMT   |   Update On 2020-09-30 08:03 GMT
தென்காசி அருகே உள்ள பாட்டப்பத்து கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் திறந்து வைத்தார்.
தென்காசி:

தென்காசி அருகே உள்ள பாட்டப்பத்து கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.08 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். மேலும் இங்கு ரூ.23 லட்சம் செலவில் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதற்கு கலெக்டர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் சரவணன், செயற்பொறியாளர் முருகன், தென்காசி யூனியன் ஆணையாளர் சண்முகசுந்தரம், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, உதவி பொறியாளர்கள் ஹெல்வின், ராதாகிருஷ்ணன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தனியா, தென்காசி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் ஆறுமுகசாமி, பிரதீவ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News