செய்திகள்
கைது

அரூர் அருகே மது விற்ற 3 பேர் கைது

Published On 2020-09-30 08:02 GMT   |   Update On 2020-09-30 08:02 GMT
அரூர் அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் மொரப்பூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற வேலு (வயது57), பாண்டியன்(50), சிந்தல்பாடியை சேர்ந்த மணிமாறன் (38) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 87 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News