செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

முதலமைச்சர் நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் ஏன் இல்லை?- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Published On 2020-09-30 06:17 GMT   |   Update On 2020-09-30 06:17 GMT
திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெறாதது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
சென்னை:

சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது. அதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. தனியார் பங்களிப்புடன் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தனியார் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அச்சிடப்பட்டிருந்தது. ஆனால்  அரசு சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா அழைப்பிதழில் துணை முதலமைச்சர் பெயர் இடம்பெறவில்லை என்ற கேள்விக்கு, துணை முதலமைச்சரின் பெயர் பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம்பெறும் என்றும், திடக்கழிவு மேலாண்மை திட்ட நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இல்லாததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

Tags:    

Similar News