செய்திகள்
கோமுகி நதி அணை

கோமுகி நதி அணையிலிருந்து வருகிற 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

Published On 2020-09-29 12:29 GMT   |   Update On 2020-09-29 12:29 GMT
வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளை ஏற்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி நதி அணையிலிருந்து 1.10.2020 முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி நதி அணையில் இருந்து, 2020-2021-ம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழைய பாசன நிலங்கள் 5,860 ஏக்கரும், புதிய பாசன நிலங்கள் 5,000 ஏக்கரும் என மொத்த 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு கோமுகி நதி அணையில் இருந்து வருகிற 1-ந்தேதி முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமொய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News