செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் பலி

Published On 2020-09-29 12:18 GMT   |   Update On 2020-09-29 12:18 GMT
தமிழகத்தில் இனறு புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,36,209 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தனியார் மருத்துவமனையில் 29 பேர், அரசு மருத்துவமனையில் 41 பேர் என 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,453 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 85,997 மாதிரிகளும், 84,163 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 72,67,122 மாதிரிகளும், 70,50,820 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,91,943 ஆக இருந்தாலும், 5,36,209 பேர் குணமடைந்துள்ளதால் 46,281 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News