செய்திகள்
சுகேஷ் சந்திரசேகர்

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு இடைக்கால ஜாமீன்

Published On 2020-09-29 11:38 GMT   |   Update On 2020-09-29 11:38 GMT
இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுயுள்ளது.
இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் 2 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
Tags:    

Similar News