செய்திகள்
தற்கொலை

பேரணாம்பட்டு அருகே மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-09-29 10:34 GMT   |   Update On 2020-09-29 10:34 GMT
பேரணாம்பட்டு அருகே மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டை அடுத்த ராஜக்கல்-சங்கராபுரம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் பூபாலன், லாரி டிரைவர். இவரது மகள் வளர்மதி (வயது 16). அழிஞ்சிக்குப்பம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி வளர்மதிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேல்பட்டி போலீஸ் நிலையத்திற்கு பூபாலன் தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து வளர்மதியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News