செய்திகள்
பரமத்திவேலூர் அருகே சூதாடிய 3 பேர் கைது
பரமத்திவேலூர் அருகே சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே பொன்மலர்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சின்னசோளிபாளையத்தை சேர்ந்த சேகர் மகன் ராஜேஷ் (வயது 30), அண்ணாநகர் அருகே பச்சப்பாளியை சேர்ந்த செல்வம் மகன் மகேஷ் (37), செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த அன்பழகன் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.19 ஆயிரத்து 500 மற்றும் 3 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.