செய்திகள்
ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-09-29 09:58 GMT   |   Update On 2020-09-29 09:58 GMT
நெல்லையில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை:

நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்கமான அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. துணைத்தலைவர் வேலு தலைமை தாங்கினார். பத்மநாபன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் மதன்பாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அனைத்து அரசு பஸ்களையும் இயக்க வேண்டும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொழிற்சங்க நிர்வாகிகள் சரவணன், மூர்த்தி, ராமசாமி, ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News