செய்திகள்
வழக்கு பதிவு

தலைக்கவசம் அணியாத 487 பேர் மீது வழக்கு

Published On 2020-09-29 09:23 GMT   |   Update On 2020-09-29 09:23 GMT
ராமநாதபுரம் பகுதியில் தலைக்கவசம் அணியாத 487 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச் சென்ற 38 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 420 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 67 பேர் மீதும், அதிக உயரத்தில் சரக்குகளை ஏற்றிச்சென்ற ஒருவர் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாத 40 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 90 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News