செய்திகள்
துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை- வைத்திலிங்கம்

Published On 2020-09-29 07:00 GMT   |   Update On 2020-09-29 07:00 GMT
கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை, அதிமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார்.
சென்னை:

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளதால், சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க. செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே முதல்வர் குறித்து நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இல்லத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் உடனான ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியதாவது:

கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. அதிமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் எனது ஆதரவு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News