அதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான கருத்து விவாதம்தான் நடைபெற்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் முன்னாள் மேயர் சிவராஜ் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆரோக்கியமான முறையில் ஜனநாயக ரீதியில் விவாதம் நடந்தது. அதிமுக செயற்குழுவில் சசிகலா பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.