செய்திகள்
திருவள்ளூர் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
திருவள்ளூர் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் சப்-இன்ஸ்பெக்டர் சாரதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மணவாளநகர், ஒண்டிகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த தென்னேரி கரையைச் சேர்ந்த முனிராஜ் (வயது 35), பெரியகுப்பம் வள்ளலார் தெருவை சேர்ந்த ரமேஷ் (43) ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் முனிராஜ், ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து, ரூ.15 ஆயிரத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.