செய்திகள்
கைது

வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2020-09-28 11:51 GMT   |   Update On 2020-09-28 11:51 GMT
வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:

வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்த வடிவேல் தலைமையிலான போலீசார் புன்னம் சத்திரத்தில் இருந்து காகித ஆலை செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மசக்கவுண்டன்புதூர் செல்லும் பிரிவு சாலையில் பெட்டிகடைகளில் மது விற்றதாக புகளூர் அன்னை நகர் 2-வது கிராசை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 42), மூலிமங்கலம் அருகே நல்லியாம் பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் (34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News