செய்திகள்
விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று
தேமுதிக பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 23-ந்தேதி இரவு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று தகவல் வெளியானது.
இதையடுத்து விஜயகாந்த் 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை செல்வது வழக்கம். வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றபோது கொரோனா அறிகுறி தென்பட்டது. கொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் தற்போது பூரண நலமுடன் உள்ளார் என்று தே.மு.தி.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவரது மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.