செய்திகள்
அவினாசி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
அவினாசி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 60). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது மனைவி ரத்னா (45) கொடுத்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.