செய்திகள்
தற்கொலை

கீழ்விஷாரத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2020-09-27 09:53 GMT   |   Update On 2020-09-27 09:53 GMT
கீழ்விஷாரத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 35), கூலி தொழிலாளி. இவர் உடல்நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News