செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

பொள்ளாச்சி ஜெயராமன் விரைவில் நலம் பெற வேண்டும் - ஓ பன்னீர்செல்வம்

Published On 2020-09-27 09:46 GMT   |   Update On 2020-09-27 09:46 GMT
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விரைவில் நலம் பெற வேண்டும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா பாதிப்பு காரணமாக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழுக்கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் தலைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் தற்போது சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விரைவில் நலம் பெற வேண்டும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று பொதுப்பணிகளைத் தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

அதனை தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான உமா பாரதி அவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News