செய்திகள்
மிரட்டல்

கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய வாலிபர் கைது

Published On 2020-09-27 09:44 GMT   |   Update On 2020-09-27 09:44 GMT
தியாகதுருகம் அருகே கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்:

தியாகதுருகம் அருகே புக்குளம் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் (வயது 31) என்பவர் தியாகதுருகம் மலையம்மன் தெரு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அதேபகுதி காந்தி நகரை சேர்ந்த கோபால் மகன் வினோத்(28) என்பவர் வேறு ஒருவருக்குச் சொந்தமான சிட்டாவை பயன்படுத்தி புக்குளம் ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி தருமாறு கேட்டார். இதற்கு மறுத்த முனியப்பனை வினோத் அபாச வார்த்தைகளால் திட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து முனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவுசெய்து வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News