செய்திகள்
காரிமங்கலம் பகுதியில் மது விற்ற 2 பேர் கைது
காரிமங்கலம் பகுதியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சந்தைப்பேட்டை, மாட்லாம்பட்டி பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது காரிமங்கலத்தை சேர்ந்த நந்தகுமார் (வயது 32), மாட்லாம்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தன் (60) ஆகிய 2 பேரும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.