செய்திகள்
கைது

மூணாறு அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Published On 2020-09-26 10:48 GMT   |   Update On 2020-09-26 10:48 GMT
மூணாறு அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மூணாறு:

மூணாறை அடுத்த சைலண்ட்வேலி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் (வயது 24). கூலித்தொழிலாளி. இவரும், 18 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் நெருங்கி பழகிய நிலையில், அந்த இளம்பெண்ணை ஆல்வின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதில் அந்த பெண் 4 மாத கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு ஆல்வின் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் மூணாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்வினை கைது செய்தனர்.
Tags:    

Similar News