செய்திகள்
கடைகளுக்கு சீல்

கந்தம்பாளையத்தில் 2 கடைகளுக்கு சீல்

Published On 2020-09-26 08:40 GMT   |   Update On 2020-09-26 08:40 GMT
கந்தம்பாளையத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கந்தம்பாளையம்:

பரமத்தி தாலுகா கந்தம்பாளையம் பகுதியில் நல்லூர் போலீசார் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்தனர். அப்போது கந்தம்பாளையம் மெயின் ரோட்டில் மணிகண்டன், குட்டி என்கிற ராஜ்குமார் ஆகியோருக்கு சொந்தமான டீ, குளிர்பான கடைகளில் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டது. பரமத்திவேலூர் தாசில்தார் சுந்தரவல்லி உத்தரவின் பேரில், துணை தாசில்தார் கலைவாணி தலைமையில், நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி, கிராம உதவியாளர் சண்முகம் மற்றும் போலீசார் முன்னிலையில் அந்த 2 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
Tags:    

Similar News