செய்திகள்
சீமான்

சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான் அறிவிப்பு

Published On 2020-09-26 08:25 GMT   |   Update On 2020-09-26 08:25 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழகர் கட்சி தனித்து போட்டியிடும் என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
சென்னை:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது, 

வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம். 

சட்டசபை தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் நீண்ட நாட்களாக ஆட்சி மாற்றத்தை வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
Tags:    

Similar News