செய்திகள்
கோப்புபடம்

மோகனூர் அருகே விவசாயியை தாக்கிய 2 பேர் கைது

Published On 2020-09-26 08:07 GMT   |   Update On 2020-09-26 08:07 GMT
மோகனூர் அருகே விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோகனூர்:

நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). விவசாயி. இவருக்கும், கீழ்பரளியை சேர்ந்த நவலடி (54) என்பவருக்கும், கீழ்பரளி பகுதியில் அருகருகே விவசாய நிலம் உள்ளது. நிலம் சம்பந்தமாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் ராமசாமி தனது நிலத்தில் உழவு ஓட்ட டிராக்டர் எடுத்து வந்தபோது, நவலடி, இவரது மகன் கார்த்திக் (27) ஆகியோர் அவருடன் தகராறில் ஈடுபட்டு, தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவலடி, கார்த்திக்கை கைது செய்தனர்.

Tags:    

Similar News