செய்திகள்
விபத்து பலி

ஆலங்குளம் அருகே வேன் மோதி தொழிலாளி பலி

Published On 2020-09-25 17:39 GMT   |   Update On 2020-09-25 17:39 GMT
ஆலங்குளம் அருகே வேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:

ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோட்டில் கடிகாரம் பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தவர் இந்திரகுமார் (வயது 58). இவர் தனது சொந்த ஊரான மாதாங்கோவில்பட்டிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆலங்குளத்தில் இருந்து வெம்பக்கோட்டை சென்ற வேன் இந்திரகுமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் வேன் டிரைவர் வைரமுத்துவை கைது செய்து வழக்குபதிவு செய்தனர்.
Tags:    

Similar News