செய்திகள்
கோப்புப்படம்

சென்னை போலீசில் உதவி கமிஷனர் உள்பட 14 பேருக்கு கொரோனா

Published On 2020-09-25 01:50 GMT   |   Update On 2020-09-25 01:50 GMT
சென்னை போலீசில் நேற்று உதவி கமிஷனர் ஒருவர் உள்பட 14 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
சென்னை:

சென்னை போலீசில் நேற்று உதவி கமிஷனர் ஒருவர் உள்பட 14 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,454 ஆக உயர்ந்தது. தீவிர சிகிச்சை பலனாக நேற்று 13 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதுவரை சென்னை போலீசில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 2,211 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு, பாதிப்பு எண்ணிக்கை, குணம் அடைந்தவர்களைவிட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News