செய்திகள்
விஜயகாந்த் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குணம் அடைய இறைவனை வேண்டுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தே.மு.தி.க. தலைவர் அன்புச் சகோதரர் விஜயகாந்த் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடிகர் ராதாரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது நீண்ட கால நண்பரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் பூரண நலம்பெற்று திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விரைவில் அவர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.