செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் 980 பேர், கோவையில் 587 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்

Published On 2020-09-23 17:02 GMT   |   Update On 2020-09-23 17:02 GMT
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 337 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
 
அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 563 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 010 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 980 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1,58,594 பேர் பாதிக்கப்பட்டு 3,097 பேர் உயிர் இழந்து 1,45,629 பேர் குணம் அடைந்து 9,868 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் –  11
செங்கல்பட்டு – 297
சென்னை – 980
கோவை – 587
கடலூர் –  183
தர்மபுரி – 130
திண்டுக்கல் – 40
ஈரோடு – 125
கள்ளக்குறிச்சி – 55
காஞ்சிபுரம் – 205
குமரி – 117
கரூர் – 41
கிருஷ்ணகிரி – 63
மதுரை – 79
நாகை – 46
நாமக்கல் – 132
நீலகிரி- 89
பெரம்பலூர்- 22
புதுக்கோட்டை- 81
ராமநாதபுரம்- 10
ராணிப்பேட்டை- 89
சேலம்-  298
சிவகங்கை- 44
தென்காசி- 46
தஞ்சை- 186
தேனி-  71
திருப்பத்தூர்-  65
திருவள்ளூர்- 218
தி.மலை- 126
திருவாரூர்- 99
தூத்துக்குடி- 55
நெல்லை- 92
திருப்பூர்- 247
திருச்சி-  112
வேலூர் – 143
விழுப்புரம்- 105
விருதுநகர் – 35
Tags:    

Similar News