செய்திகள்
போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை அருகே போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
திருவண்ணாமலை:
வெம்பாக்கம் தாலுகா மோரணம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு தொடர்பாக விசாரிக்க சென்ற போலீஸ்காரர் துரைராஜ் என்பவரை மணிகண்டன் தாக்கி விசாரணை செய்யவிடாமல் தடுத்துள்ளார். மேலும் அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து மோரணம் போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கலெக்டர் கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மண்கண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 99 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.