செய்திகள்
4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- வாலிபர் போக்சோவில் கைது
கோவையில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 25), கட்டிட தொழிலாளி. இவர், கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள வாடகை வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் 4 வயது சிறுமியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டது.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இது குறித்த புகாரின் பேரில் கோவை கிழக்குபகுதி அனைத்து மகளிர் போலீசாரின் விசாரணையில் தினேஷ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.
இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தினேசை போலீசார் கைது செய்தனர். இவர், திருப்பூரில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து தண்டனை பெற்றவர் ஆவார்.