செய்திகள்
தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மத்திய கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி சிவலோகத்தில் 6 செ.மீ., பெருஞ்சாணியில் 4 செ.மீ., மழை பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மத்திய கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி சிவலோகத்தில் 6 செ.மீ., பெருஞ்சாணியில் 4 செ.மீ., மழை பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.