செய்திகள்
கோப்புபடம்

நெல்லை அருகே சூதாடிய 6 பேர் கைது

Published On 2020-09-22 15:16 GMT   |   Update On 2020-09-22 15:16 GMT
நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சூதாடியவர்களை சுற்றி வளைத்தனர். 

இதுதொடர்பாக சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த கோபால் (வயது 46), குலவணிகர்புரம் அந்தோணிராஜ் (46), தாழையூத்து செல்வம் (36), மேலப்பாளையம் மைதீன் (40), அப்துல்காதர் (41), குதுப் (43) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.14 ஆயிரத்து 850 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News