செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி

Published On 2020-09-22 14:29 GMT   |   Update On 2020-09-22 14:29 GMT
கோவை அருகே மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை தெலுங்குபாளையம் அருகே உள்ள பாரதிரோடு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 42) . எலெக்ட்ரீசியன். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட மின்பழுதை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு கிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News