செய்திகள்
விபத்து பலி

திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2020-09-22 14:15 GMT   |   Update On 2020-09-22 14:15 GMT
திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள செந்தலை அம்பலக்காரர் தெருவை சேர்ந்தவர் சக்திகுமார் (வயது38). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் செந்தலை ஜவுளி கடை பஸ் நிறுத்தத்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சக்திகுமார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி மோட்டார் சைக்கிளில் வந்த மணத்திடல் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை, வீரமணி, மணிகண்டன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் உயிரிழந்த சக்திகுமாரின் உடல் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News