செய்திகள்
முககவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம்
திண்டுக்கல் அருகே முககவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம், மாலைப்பட்டி ஆகிய பகுதிகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முகமது கமாலுதீன் தலைமையில் ஊழியர்கள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மாலைப்பட்டி ரோட்டில் வந்த அரசு பஸ்சில் முககவசம் அணியாமல் வந்த 11 பயணிகளுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.