செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்: கார் நிறுவன ஊழியர் பலி
அவினாசி அருகே விபத்தில் கார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி:
நெல்லை மாவட்டம் குப்பகுறிச்சியை சேர்ந்தவர் வெள்ளதுரை (வயது 31). இவர் கோவை பீளமேட்டில் தங்கி அங்குள்ள ஒரு கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் கோவையிலிருந்து மோட்டார் சைக்கிளில் பவானி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவினாசி அருகே வேலாயுதம்பாளையம் பை பாஸ் ரோட்டில் சென்ற போது அவருக்கு பின்னால் வந்த வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் குப்பகுறிச்சியை சேர்ந்தவர் வெள்ளதுரை (வயது 31). இவர் கோவை பீளமேட்டில் தங்கி அங்குள்ள ஒரு கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் கோவையிலிருந்து மோட்டார் சைக்கிளில் பவானி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவினாசி அருகே வேலாயுதம்பாளையம் பை பாஸ் ரோட்டில் சென்ற போது அவருக்கு பின்னால் வந்த வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.