செய்திகள்
கைது

சாராயம், மது விற்ற 5 பேர் கைது

Published On 2020-09-21 09:55 GMT   |   Update On 2020-09-21 09:55 GMT
அரூர் பகுதியில் சாராயம், மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:

அரூர் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கோட்டப்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (வயது 53), மேல்தண்டாவை சேர்ந்த பீட்டர் (54) ஆகிய 2 பேரும் சாராயம் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற இருமத்தூரை சேர்ந்த சீனிவாசன்(58), பேளாரஅள்ளி பெரியசாமி(32), சப்பாணிப்பட்டி பழனி(56) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 97 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News