செய்திகள்
கோவை மாவட்டத்தில் 2 போலீசார் உள்பட 568 பேருக்கு கொரோனா தொற்று - 6 பேர் பலி
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 போலீசார் உள்பட 568 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 6 பேர் பலியானார்கள்.
கோவை:
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த வாரம் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது நேற்று முதல் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 568 ஆக உயர்ந்திருந்தது. இதில் போலீஸ் பயிற்சி பள்ளி குடியிருப்பை சேர்ந்த 30 வயது ஆண் காவலர், காந்திபுரம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 40 வயது பெண் காவலர், சூலூர் விமானப் படையை சேர்ந்த 42 வயது ஆண், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியை சேர்ந்த 29 வயது ஆண் மருத்துவப் பணியாளர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர மேட்டுப்பாளையத்தில் 54 பேர், பொள்ளாச்சியில் 30 பேர், வெள்ளக்கிணரில் 28 பேர், பீளமேட்டில் 27 பேர், ராமநாதபுரத்தில் 19 பேர், அன்னூரில் 18 பேர், சிங்காநல்லூரில் 13 பேர், கணபதியில் 10 பேர், சூலூரில் 9 பேர் உள்பட 568 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 914 ஆக உயர்ந்துள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 76, 67, 60, 60 வயது முதியவர்கள், 55 வயது ஆண், 40 வயது பெண் ஆகிய 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் கோவையில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 382-ஆக உயர்ந்துள்ளது..
கோவையில் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா கண்காணிப்பு மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 488 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை கோவை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 168 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த வாரம் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது நேற்று முதல் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 568 ஆக உயர்ந்திருந்தது. இதில் போலீஸ் பயிற்சி பள்ளி குடியிருப்பை சேர்ந்த 30 வயது ஆண் காவலர், காந்திபுரம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 40 வயது பெண் காவலர், சூலூர் விமானப் படையை சேர்ந்த 42 வயது ஆண், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியை சேர்ந்த 29 வயது ஆண் மருத்துவப் பணியாளர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர மேட்டுப்பாளையத்தில் 54 பேர், பொள்ளாச்சியில் 30 பேர், வெள்ளக்கிணரில் 28 பேர், பீளமேட்டில் 27 பேர், ராமநாதபுரத்தில் 19 பேர், அன்னூரில் 18 பேர், சிங்காநல்லூரில் 13 பேர், கணபதியில் 10 பேர், சூலூரில் 9 பேர் உள்பட 568 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 914 ஆக உயர்ந்துள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 76, 67, 60, 60 வயது முதியவர்கள், 55 வயது ஆண், 40 வயது பெண் ஆகிய 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் கோவையில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 382-ஆக உயர்ந்துள்ளது..
கோவையில் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா கண்காணிப்பு மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 488 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை கோவை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 168 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.