செய்திகள்
நீதிமன்ற இ-சேவை மையம் திறப்பு

ஏற்காடு தாலுகா அலுவலக வளாகத்தில் நீதிமன்ற இ-சேவை மையம் திறப்பு

Published On 2020-09-20 14:19 GMT   |   Update On 2020-09-20 14:19 GMT
ஏற்காட்டில் பொதுமக்களின் வசதிக்காக தாலுகா அலுவலக வளாகத்தில் நீதிமன்ற இ-சேவை மையத்தை நீதிபதி சந்திரசூட் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
ஏற்காடு:

ஏற்காட்டில் பொதுமக்களின் வசதிக்காக தாலுகா அலுவலக வளாகத்தில் நீதிமன்ற இ-சேவை மையத்தை நீதிபதி சந்திரசூட் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதையொட்டி ஏற்காட்டில் நடந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, மாவட்ட கூடுதல் நீதிபதிகள் ராஜேந்திரன், இளங்கோ மற்றும் சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த இ-சேவை மையத்தில், வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்கள் மட்டுமின்றி, நீதிமன்றத்தின் வழக்கு நிலை அடுத்த வாய்தாவின் தேதி மற்றும் இதர விளக்கங்களை பெறலாம். பத்திர தாள்கள் வாங்க வழிவகை செய்வது, மாவட்ட இலவச சட்ட ஆணையம் மூலம் மக்கள் இலவச சட்ட உதவி பெற்று பயன் பெறலாம் என முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு கூறினார்.
Tags:    

Similar News