செய்திகள்
ஒரு வீட்டில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டபோது எடுத்த படம்.

ஆச்சிப்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

Published On 2020-09-20 13:56 GMT   |   Update On 2020-09-20 13:56 GMT
ஆச்சிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சங்கம்பாளையம் பகுதியில் 52 வயது நபருக்கும், 46 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் மற்றும் சுகாதாரத்துறையினர் பார்வையிட்டு துரிதப்படுத்தினர். மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News